உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், பிரிட்டன் தூதுவர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர்களை அவர்கள் சந்தித்து தமது வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தையும் தூதுவர்களிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.