செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆழிப்பேரலை நினைவேந்தல்: ஆறாத்துயரில் உறவுகள்! – ஒப்பாரி வைத்து கதறல்

ஆழிப்பேரலை நினைவேந்தல்: ஆறாத்துயரில் உறவுகள்! – ஒப்பாரி வைத்து கதறல்

1 minutes read

ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

கடந்த 2004ஆம் ஆண்டு ‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

அதன் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு உள்ளிட்ட நாடெங்கும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதையடுத்து உயிரிழந்தவர்களை நினைவேந்தி நாட்டின் அனைத்து இடங்களிலும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து உறவுகளின் கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களின் உறவினர்கள் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளைப் படைத்து ஒப்பாரி வைத்து ஓலம் இட்டனர். இதனால் அப்பகுதி எங்கும் சோகமயமாகக் காட்சி அளித்தது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

உடுத்துறை சுனாமி பொது நினைவாலயத்தில் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More