செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெள்ளம் பெருக்கெடுத்ததால் வெருகல் பிரதேசம் பாதிப்பு ..!

வெள்ளம் பெருக்கெடுத்ததால் வெருகல் பிரதேசம் பாதிப்பு ..!

1 minutes read

மகாவலி கங்கை வெள்ளப் பெருக்கெடுத்ததினால் அதனை அண்டிய திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான மாவடிச்சேனை வட்டவன் சேனையூர் போன்ற கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது அதன் காரணமாக சுமார் 150ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை வெருகலாம்பதி மகாவித்தியாலயத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஆனைத்தீவு – முத்துச்சேனை வீதி போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழ (02) பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. வெருகல் பகுதியும் நீரில் மூழ்கி வருகின்றது. கடற்படையினர் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அத்தோடு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியும் நீரில் மூகிழ்கி பயணிகள் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More