களுத்துறை மற்றும் அதனை அன்றிய பிரதேசங்களில் பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை அபகரித்தாக கூறப்படும் “பயாகலை மக்கா” என்பவரை களுத்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளதுடன் பெண்களின் தங்க நகைகளையும் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 6 கிராம் நிறையுடைய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பாணந்துறை நகரில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை இவரே பறித்துச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த களுத்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.