Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பத்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுக் கொலை!

பத்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுக் கொலை!

1 minutes read

பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் மன்னார், தலைமன்னார் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றைப் பராமறிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே மேற்படி சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில் அருகில் இருக்கும் பெண் ஒருவர் சந்தேகநபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில், அவர்களுடன் சந்தேகநபர் நட்பாகப் பழகி வந்துள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை உணவு வழங்கும் பெண்ணின் பேத்தியான மேற்படி சிறுமியைக் கடைக்கு அழைத்துச்  சென்ற நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அருகில் இருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடனும், ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின்போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More