செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது!

கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது!

0 minutes read

இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, இக்கடுவை பிரதேசத்தில் மேற்படி யுவதி இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன், கடந்த வருடம் இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More