செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,101 பேர் கைது!

யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,101 பேர் கைது!

1 minutes read

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய  நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,030 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 1,030 சந்தேக நபர்களில் 46 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையான 17 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 43 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 71 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 பேரும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  63 பேரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைரேகைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More