Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பெளத்த தலைமை மதகுரு பாராட்டு

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பெளத்த தலைமை மதகுரு பாராட்டு

1 minutes read

மல்வத்து மகா விஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று (17) அம்பாறை, அரந்தலாவ சர்வதேச பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உட்பட 150 பௌத்த மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய தலைமை மதகுரு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மூவின மக்களையும் மதித்து செயற்படக்கூடியவர் எனவும், கடந்த காலங்களை விட தற்போது கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களுக்கும் ஒரே விதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், ஆளுநரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாகவும், மூவின மக்கள் மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிக மரியாதை இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் கருத்து தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More