Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

1 minutes read

கட்டுநாயக்க பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தார் எனக் கூறப்படும்  போதைப்பொருள் கடத்தல்காரர்  ஒருவர். 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட  யுக்திய நடவடிக்கையின்  போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் ஜா-எல, பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் உரிமையாளர் எனவும் இவர் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேக நபரிடமிருந்து  2 கிலோகிராம் கேரள கஞ்சா, 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், மைக்ரோ இலத்திரனியல் தராசு மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் கைதான சந்தேக நபர் பற்றி பொலிஸாருக்கு  தகவல்கள் வழங்கியுள்ளனர் .

இத்துடன் சந்தேக நபர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “சங்கா”வின் சகா என விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More