Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

1 minutes read
மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது என்று மாவனல்லை பொலிஸாருக்குத்  தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கினார்.

இதையடுத்து மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டார் எனவும், பின்னர் மேற்படி நபர் அந்தப் பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்டபோது இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும், அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More