Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லொறியில் மோதி இரண்டரை வயது குழந்தை சாவு!

லொறியில் மோதி இரண்டரை வயது குழந்தை சாவு!

1 minutes read
பெற்றோருடன் ஆலயமொன்றில் குழந்தை சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தபோது, மேற்படி குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது லொறியில் மோதி உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை, பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளது.

இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 2 வயது 7 மாதங்களேயான குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More