அவர் மேலும் கூறுகையில்,
“தமிழர்களின் தேசிய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால், அவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பல பேர் தோல்வியடைந்தனர்.
வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வைப் பெற்றுத்தரவில்லை. இதனால்தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும்.” – என்றார்.
கச்சதீவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிறீதரன் எம்.பி.,
“இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது.
வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளைப் பாதிக்க விடமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரமே இந்தக் கச்சதீவு விவகாரம்.” – என்றார்.