Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பண்டாரகமையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

பண்டாரகமையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

0 minutes read

பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களனிகம தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இன்று (21) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 5 அடி4 அங்குலம்‌ உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நீல நிற சட்டையும் செம்மஞ்சள் நிற வேட்டியும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பண்டாரகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More