செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அயோத்தி கோவிந்த் தேவ் சுவாமிகள் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம்

அயோத்தி கோவிந்த் தேவ் சுவாமிகள் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம்

1 minutes read

இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இன்றைய தினம் (24) ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா  சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு வருகைதந்த சுவாமி கோவிந்த் தேவ் மகாராஜை ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலர்மாலை அணிவித்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி மாணவர்களின் கலாசார இசை, நடன நிகழ்வுகளோடு மங்கள வாத்தியம் முழங்க ஆலய பரிபாலன சபையினரால் கோவிந்த் தேவ் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது நுவரெலியா பிளக்பூல் சென் அன்தனிஸ் மாணவர்கள் மலர் தூவ, காயத்திரி பீடம் பாவரசா நர்த்தனாலயா மாணவர்களின் வரவேற்பு நடனத்தோடும் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து சுவாமி கோவிந்த் வருகையை நினைவுகூரும் முகமாக நினைவுக் கல்வெட்டு ஒன்றை திரை நீக்கம் செய்துவைத்ததுடன் விசேட பூஜைகளை தலைமையேற்று நடத்தினார்.

அதன் பின்னர், சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு ஆலய நிர்வாக சபையினரால் நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அடுத்து, எஸ்போட் விருந்தகத்தில் ஆலய நிர்வாக சபையினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More