Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

0 minutes read

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தபட்ட இந்த சந்தேக நபர்கள், இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நான்கு சந்தேக நபர்களும் 434 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தபோதே முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More