Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோடரியால் தாக்கி மாமாவைக் கொலை செய்த மருமகன்! – வவுனியாவில் பயங்கரம்

கோடரியால் தாக்கி மாமாவைக் கொலை செய்த மருமகன்! – வவுனியாவில் பயங்கரம்

1 minutes read
வவுனியா, மதுராநகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் மேற்படி இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாகக் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில், வெளியில் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் காேடரியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் காெண்டு சென்ற பாேதும் அவர் அங்கு காெண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மாேகன் என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற  சிதம்பரபுரம் பாெலிஸார் சம்பவம் தாெடர்பில் விசாரணைகளை மேற்காெண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More