செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் கைது!

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் கைது!

1 minutes read
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணினர் என்று கூறப்படும் மேலும் 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முல்லேரியா, மல்வானை ,கடுவலை மற்றும் உடுகம்பொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 57, 39, 25, 23 மற்றும் 35 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 10, கொழும்பு 14, கொழும்பு 13, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44, 21, 30, 20 மற்றும் 33 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த  மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை பாதாள உலகக் குற்றக் குழுக்களைச் சேர்ந்த 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More