நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 4,472 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது,41 கிலோ கிராம் ஹெரோயின்,43 கிலோ கிராம் ஐஸ்,3 இலட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.