செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓய்வுபெற்ற கிளிநொச்சி அதிபருக்கு லண்டனில் மதிப்பளிப்பு

ஓய்வுபெற்ற கிளிநொச்சி அதிபருக்கு லண்டனில் மதிப்பளிப்பு

2 minutes read

கிளிநொச்சியில் இருந்து இலண்டன் வருகைதந்த ஓய்வுநிலை அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கத்தை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று (11/05/24) இலண்டனில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அவரது நீண்ட கல்விப்பணிக்காக கிளிமக்கள் அமைப்பு அவரை மதிப்பளித்து கௌரவப்படுத்தியிருந்து. அத்துடன் கிளி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்க பிரித்தானியக் கிளையினாலும் மதிப்பளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னனி பாடசாலைகளான கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் கிளி புனித திரேசா பெண்கள் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அதிபராகக் கடமையாற்றியுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிளிநொச்சிப் பிரதேச உறவுகள் மற்றும் அவரது மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More