இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 12 பொலிஸார் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.
புதன்கிழமை இரவு ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் பணியில்பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர் இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த 12 பொலிஸார் பரிதாபமாக உயிரிழந்ததுடன்
ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்களை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதக் குழுக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறன.