செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சிங்கத்திடம் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற தந்தை செய்த காரியம்.

சிங்கத்திடம் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற தந்தை செய்த காரியம்.

1 minutes read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், உள்ள காட்டு பூங்கா ஒன்றில் ஒரு குடும்பத்தினர் நடைபயணம் சென்றிருக்கின்றனர். அவர்களின் மூன்று வயது சிறுவன் அனைவருக்கும் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறான். அப்போது, திடீரென பாய்ந்து வந்த மலை சிங்கம் ஒன்று மூன்று வயது சிறுவனை முதுகில் கவ்வி தூக்கி கொண்டு ஓடியிருக்கிறது.

உடனே அதிர்ச்சியடைந்த தந்தை, சிறுவனை காப்பாற்ற உடனடியாக தான் வைத்திருந்த பையை சிங்கத்தை நோக்கி வீசியிருக்கிறார். பையை கண்டதும் சிறுவனை போட்டுவிட்டு பையை தூக்கி கொண்டு மரத்தின் மேல் ஏறிக்கொண்டது சிங்கம்.அதன் பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதுகுறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரிக மலை சிங்கங்கள் மனிதர்கள் மேல் தாக்குதல் நடத்துவது மிக அரிதாகவே நடைபெறுவதாக கூறியுள்ளனர். 1986ல் இருந்து இதுவரை 17 பேர் மலை சிங்கங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மூவர் உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More