0
இதன் பலனாக கடந்த February மாத இறுதியில் இருதரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலீபான் அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த சமாதான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இவ் ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி சிறையிலுள்ள ஐந்தாயிரம் தலீபான் கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என தலீபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ஒப்பந்தத்தை மீறி தங்கள் அமைப்பு மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதாகவும், இது நம்பிக்கை துரோகம் என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அமெரிக்கா தொடர்ந்து இதே போக்கை கையாண்டால் அமெரிக்கா அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்தம் விரைவில் முறிவதை தவிர வேறு வழியில்லை என்றும் தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.
வணக்கம் இலண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்