இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளபோதிலும் , அவை எதிர்வரும் யூன் மற்றும் யூலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் .
கொவிட் பரவல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதுவரையில் 9 இலட்சத்து 25 242 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
எவ்வாறிருப்பினும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் போதுமானதல்ல. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளதோடு அஸ்ட்ரசெனிகா மாத்திரமின்றி சீனோபார்ம் , ஸ்புட்னிக் பைசர் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் இதன் போது சுட்டிகாடியுள்ளார்