ஜனாதிபதி தேர்தலின்போது 69 இலட்சம் மக்கள் தனது முகத்திற்காக வாக்களிக்கவில்லை என்றும் சுபீட்சமான கொள்கை திட்டத்தின் ஊடாக மாற்றம் ஏற்பட வேண்டும் என்றே வாக்களித்தனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புரட்சிகரமான மாற்றம் கடினமானதாக அமைந்தாலும் அதுவே நிலையானது என்பதனால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இராணுவமயமாக்கல் நடவடிக்கை என பலர் எதிர்ப்பினை வெளியிட்டாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆகவே விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை என்றும் மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் அரசாங்கத்துடன் ஒன்றினைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
கடந்த இரண்டு வருட காலத்தில் நாட்டை பல முறை முடக்க வேண்டிய தேவை காணப்பட்டமையினால் பொருளாதாரத்தை முன்னேற்றுவது கடினம் என்பதை அறிந்துகொண்டும் சிலர் எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவசாயியின் கழுத்தை பிடித்து சேதன பசளையை பயன்படுத்து என்று குறிப்பிட முடியும் என்றும் இருப்பினும் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை தனக்கு கிடையாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.