தற்போதைய நெருக்கடி நிலையில் அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் இருப்பவர்களை எப்படி வெளியேற்றுவது, எப்படி பதவிகளை எடுப்பது என்பது முக்கியமல்ல எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை. வெளிநாட்டு கையிருப்பு இல்லை. நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம். இப்போது எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர், இது அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தற்போதைய நிலையில் அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருப்பவர்களை எப்படி வெளியேற்றுவது, எப்படி பதவிகளை எடுப்பது என்பது முக்கியமல்ல. ஜனாதிபதியை சந்தித்த போது சர்வகட்சி மாநாட்டை முன்மொழிந்தோம். மனிதர்கள் படும் துன்பங்களைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறினோம்.
அண்மைக்காலமாக டீசல் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
வரிசையில் போய் இன்னும் விலை உயர்ந்த டீசலை நிரப்பிக்கொண்டு, எரிபொருள் தீரும் வரை எரிவாயு தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.