அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது.
இதனையடுத்து, பாடசாலைகள் மற்றும் Fort Lauderdaleஇல் உள்ள சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அதிக மழையின் காரணமாக விமான நிலையத்துக்குச் செல்லும் வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் வெள்ளமும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஏராளமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், மக்கள் பலர் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், விமான நிலையத்தை நேற்று (13 ) மீண்டும் திறக்க அதிகாரிகள் திட்டமிட்ட போதும், விமான ஓடுபாதையில் உள்ள நீரையும் குப்பைகளையும் முழுமையாக அகற்ற அதிக நேரம் தேவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால் விமான நிலையம் இன்று (14 ) திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.