வெப்பம் அதிகரித்த ஆண்டாக 2022 ஆம் ஆண்டு காணப்பட்டதால் கடல் மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகியுள்ளது.
ஐநா காலநிலை அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே வெப்பமான ஆண்டுகளில் முதன்மை பெரும் ஆண்டாக காணப்படுகிறது.
தொடர்ச்சியான வெப்ப ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டும் அடங்கியதன் விளைவால் இந்த தீமை ஏற்பட்டுள்ளது. 2022 சராசரியாக 1.15 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் இருந்துள்ளது. இது சரியாக எட்டு ஆண்டுகளில் உலகளவில் பதிவாகிய மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்று என அறிக்கையில் கூறபட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் அண்டார்டிக் பனிப்பாறைகள் அளவுக்கு அதிகமாக உருகி வருவதால் அபாயம் அதிகரித்துள்ளது; என ஐ.நாவின் அறிக்கை காணப்படுகிறது.