அமெரிக்காவின் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாகிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் எந்த வித பயிற்சியும் உரிமமும் இன்றி யார் வேண்டும் எனாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள சட்டம் அனுமதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.