உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களின் இருப்பை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையால் ஒருவகை பதற்றம் அதிகரிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
பயன்பாட்டுக்கு ஏற்ற அத்தகைய, 9,500 ஆயுதங்களை உலக நாடுகள் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்டாக்ஹோல்ம் (Stockholm) அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
சீனா அதன் ஆயுதங்களைப் பெருமளவு அதிகரித்துள்ளதாக குறித்த கழகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகியவையும் கூடுதல் ஆயுதங்களைப் பெற்றிருப்பதாகவும் ரஷ்யாவும், அமெரிக்காவும் சுமார் 90 சதவீத அணுவாயுதங்களை வைத்துள்ளன எனவும் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது.