பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் இன்று (12) நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய பல்கலைக்கழக ஒழுங்கமைப்பைப் பாதுகாத்தல், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், வரவு – செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரித்தல், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை மீண்டும் செலுத்துதல், கல்விசார ஊழியர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பல்கலைக்கழகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரும் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பினரும் இன்று பல கோரிக்கைகளை முன்வைத்து கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.