செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிலம்பரசனின் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

சிலம்பரசனின் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

1 minutes read

தமிழ் திரையுலகில் சிவாஜி- எம்ஜிஆர் ,  கமல்- ரஜினி, அஜித் – விஜய் ஆகிய வணிக கூட்டணியை தொடர்ந்து தனுஷ்  – சிலம்பரசன் கூட்டணி உருவானது. ஆனால் இந்த இரண்டு நடிகர்களுமே சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களுக்காக தங்களை தமிழ் திரையுலகின் வணிக கூட்டணி என்ற முத்திரையை விரும்பவில்லை. இதனால் இருவரும் தனித்தனியாகவே தங்களை நட்சத்திரங்களாக உயர்த்தி கொண்டார்கள். அந்த வகையில் சிலம்பரசன் நடிப்பில் தயாராகும் புதிய படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஓ மை கடவுளே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், படத்தின் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிலம்பரசன்-  அஸ்வத் மாரிமுத்து-  ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் ‘எஸ் டி ஆர் 49’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இதற்கு படக் குழுவினர் வெளியிட்டிருக்கும் பிரத்யேக புகைப்படங்கள் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More