Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் எப்படி மறப்பாள் | பா .உதயன்

எப்படி மறப்பாள் | பா .உதயன்

1 minutes read
தூங்கும் போதும்
தூங்கி எழும்பும் போதும்
எல்லா நேரமும்
எப்பவும் இவளுக்கு இவள் மகன்
நினைப்புத்தான்
ஊர் உறங்கி கிடந்த
மாலை ஒரு நாள்
ஒருவருக்கும் தெரியாமல்
இழுத்துப்  போனார்கள்
அன்று போனவன் போனவன் தான்
இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு
இன்று  இவள் ஊரின்
அம்மன் தேர் திருவிழா
ஆண்டு தோறும்
அந்த கற்பூர சட்டியை
தலையில்  வைத்தபடி
அவனை இடுப்பில் அணைத்தபடி
அந்த ஊரே அதிரும்படி
அரோகரா சொன்னபடி
அந்த அம்மன் தேர் பார்க்க
அவனோடு சென்ற
அந்த நாட்களின்  நினைப்போடு
எப்பவும் இவளுக்கு இவன்
மகன் நினைப்பு தான்
கடைசியாய் இவன் எடுத்த
படத்தை காவியபடி
தேடித்தேடி அலைந்து
தெரு முழுக்கு கூவி திரிந்தும்
எவனும் திரும்பி கூட பார்க்கவில்லை
எட்டி ஒரு ஆறுதல் கூட சொன்னதில்லை
விட்ட பாடாயும் இல்லை
இவள் விம்மலும் அழுகையும்
இப்பவும் இவளுக்கு
இவள் மகன் நினைப்பு தான்
எப்படி மறப்பாள்
அவள் வலி அவளுக்கு
தானே தெரியும்.
-பா .உதயன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More