குதிரை மலை கடற்பகுதிக்கு அப்பால் ஒரு தொகை தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை (29ம் திகதி ) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 41 தங்க பிஸ்கட்டுகள் கைபற்றப்பட்டுள்ளதுடன் அதற்கும் மேலதிகமாக கடத்திய 4 கிலோ 200 கிராம் தங்கத்தையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30, 35, 36 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.