லண்டனில் ஒரு வீட்டிலிருந்த ப்ரீஸருக்குள் இரண்டு இளம்பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் காணாமல் போன சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த Mihrican Mustafa (38) என்ற பெண்ணும், 2016ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போன ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Henriett Szucs (34) என்ற பெண்ணுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் பொலிசார் தேடி வந்தநிலையில், லண்டனிலுள்ள Vandome Close என்ற இடத்தைச் சேர்ந்த Zahid Younis (35) என்பவர் வீட்டிலிருந்த ப்ரீஸர் ஒன்றில் அவர்கள் இருவரின் உடல்களும் கண்டு பிடிக்கப்பட்டன.