கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட கல்மடு பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி நேற்று மாலை நான்கு மணியளவில் வழங்கிவைக்கப்பட்டது.
வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள் எனும் தொண்டர் நிறுவனத்தில் நிதி அனுசரணையில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ,கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குறித்தக்குடும்பங்களுக்கு அரிசி,கோதுமை மா,சீனி,பருப்பு,தேயிலை,வெங்காயம், உருளைக்கிழங்கு, தேங்காய் எண்ணை போன்ற பொருட்கள் அடங்கிய பெறுமதியான உலருணவுப் பொதியே வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.