கனடாவில் அகதிக் கோரிக்கை விண்ணப்பங்கள் கடந்த ஓரிரு வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தேக்க நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பின் பொது வைத்திய நிலையங்களில் குறிப்பாக கீயூபெக் மாகாணத்தில் குறிப்பிட்ட தொகையான அகதி கோரிக்கை விண்ணப்பத்தாரிகள் தமது உயிரையும் துச்சமாக மதித்து கொரானா வைரஸினால் பிடிக்கப்பட்டவர்களை
வைத்திய நிலையங்களிலும் பராமரிப்பு நிலையங்களில் மிக நன்றாக சேவை செய்தமையினால் ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான மத்திய அரசு அவர்களிற்கு அகதி விசாரணையின்றியே கனடிய நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.