காணி மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு விசேட நியாயாதிக்க சபையை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நியாயாதிக்க சபையின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காணி மற்றும் நிதி தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைப்பதால் விசேட நியாயாதிக்க சபைகளை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த விசேட நியாயாதிக்க சபை ஸ்தாபிக்கப்படவுள்ளது.