சரும நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தாவிற்கு சென்னையில் ரகசிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சரும நோய்காரணமாக கடந்த ஓராண்டில் பட பெரிய பட வாய்ப்புகளை சமந்தா இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் சமந்தா சிகிச்சை பெற்றுவந்தார், ஆனால் மீண்டும் முகத்தில் பெரிய பருக்களும், உடலில் சில மாற்றங்களும் ஏற்பட்டதால், சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையை சமந்தா மாற்றிவிட்டாராம்.
அஞ்சான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்கு பின் கிடைத்த ஓய்வின் போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.