தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ‘‘சகாப்தம்’’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மகனின் ஷூட்டிங் பணிகளை கவனிப்பதற்காக விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா சென்றார்.
இருவரையும் சென்னை விமான நிலையத்தில் இளைஞர் அணி மாநில தலைவர் எல்.கே.சுதீஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு அவர் சென்னை திரும்புவதாக தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு முதன்முதலாக விஜயகாந்த் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.