Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்திய ரூபா 1 கோடி சம்பளம் கேட்கும் கானா பாலா..!இந்திய ரூபா 1 கோடி சம்பளம் கேட்கும் கானா பாலா..!

இந்திய ரூபா 1 கோடி சம்பளம் கேட்கும் கானா பாலா..!இந்திய ரூபா 1 கோடி சம்பளம் கேட்கும் கானா பாலா..!

1 minutes read

சில வருடங்களுக்கு முன்பு வரை வட சென்னை ஏரியாவில் கானா பாடல்களை பாடி வந்தவர் கானா பாலா. அவரை பாடகராக, பாடலாசிரியராக அட்டகத்தி படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்தில் நடுக்கடலில் கப்பலில் இறங்கி தள்ள முடியுமா என்ற பாடல் சூப்பர்ஹிட்டாகி, கானா பாலாவை பிரபலமாக்கியது. தொடர்ந்து அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மாபெரும் புகழை அடைந்துவிட்டார். இன்றைக்கு கானா பாலா என்றால் தெரியாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவிவிட்டது.

அட்டகத்தி படத்திற்கு சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கிய கானா பாலா இப்போது பிரபலமான பாடகராக, பாடலாசிரியராக, நடிகராகவும் ஆகிவிட்டார். ஒருநாளைக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதற்கிடையில் கானா பாலா ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. தற்போதைய தகவல் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முன் வந்தவர்கள் அத்திட்டத்தை கைவிட்டுவிட்டனராம். ஏன்? படத்தின் கதையைக் கூட கேட்க ஆர்வம் காட்டாத கானா பாலா, ஒரு கோடி சம்பளம் கொடுக்கணும் என்று எடுத்த எடுப்பிலேயே கண்டிஷன் போட்டிருக்கிறார். வந்தவர்கள் வுடு ஜூட்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More