Friday, September 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சரத்குமார் – சண்முக பாண்டியன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சரத்குமார் – சண்முக பாண்டியன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

1 minutes read

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் – நடிகர் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய வாரிசும், நடிகருமான சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  இந்தத் திரைப்படத்தில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை தாமிகா, நடிகர் யோகி ராம், கஜராஜ், கல்கி ராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியிலான பொழுதுபோக்கு படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள தேனி நகரத்தில் தொடங்கி இருக்கிறது.

இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா ‘, ‘எம்ஜிஆர் மகன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் இணைந்து நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு படப்பிடிப்பு நடைபெறும் தருணத்திலேயே ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More