பிறந்தது ஒரு மடி – நான்
வளர்ந்தது உன் மடி
கிடைக்குமா இந்த மடி – மீண்டும்
திரும்புமா அந்த நொடி…
அழகிய ஓவியம்போல
விரிந்தது என் வாழ்வு – அதில்
மெல்லிய தூரிகை போல
வரைந்ததோ உன் கைகள்…..
சின்னச் சின்ன ஆசைகளும் – என்
சிறுவயது விருப்புகளும்
சிதையாமல் பார்த்தவளே – என்
சிந்தையில் நிறைந்ததை அறிந்தாயோ அன்று
என் தேவை என்னவென்று – என்றும்
எனக்குத் தெரிந்ததில்லை
எல்லாமே உன்னிடம் கேட்டே,
வாழ்ந்ததால் நிறைவு கண்டேன்
என் தமிழின் அழகியலுக்கு
தண்ணீர் ஊற்றி வளர்த்தவளே – நான்
ரசிக்கும் இலக்கியத்துக்கு
முகவரி தந்து உயர்த்தியவளே
தாயாகி திசைகள் காட்டியவளே
சேயாகி வாழ்கின்றேன் நான் !
காலங்கள் கடந்தும் – வாடாத
தாமரை மலரல்லவா நீ…
– வந்தியத்தேவன் –