Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | புதியதோர் தமிழ்ச்சாதி | காந்திகவிதை | புதியதோர் தமிழ்ச்சாதி | காந்தி

கவிதை | புதியதோர் தமிழ்ச்சாதி | காந்திகவிதை | புதியதோர் தமிழ்ச்சாதி | காந்தி

0 minutes read

தாம் அகதிகள் இல்லையென்பார்

அகந்தை மிகக்கொள்வார்

புலம் பெயர் தமிழர் என்பார்

புதுமை பல சொல்வார்

தாம் வந்து இருபதாண்டு என்பார் சிலர்

ஆகா நாங்கள் முப்பதாண்டு என்பார் பலர்

இருபதும் அகதிதான்

முப்பதும் அகதிதான்

 

 

படிக்கவந்தவர்கள்  – நாம்

அகதிகள் இல்லை என்பார்

படிகத்தான்வந்தாய்,

படித்து முடிந்தபின்

திரும்பி ஏன் போகவில்லை?

அதுவும் ஒரு நாடோ?

அங்கேயும் மனிதன் போவானோ?

கறுப்புநிற ஆங்கிலேயன்

கதைகள் பல பேசுகின்றான்.

 

 

பிறந்த தம் மண்ணை

இகழ்ந்தும் பேசுகின்றார்

சிறந்த தமிழர் இவர்…

சிராட்டி வளர்த்த மண்ணை மறந்த மனிதர்.

தாயை மறந்திடலாம்,

தாய் மண்ணை மறக்கலாமோ?

இறந்து போகுமட்டும்

இதயம் மறக்கலாமோ ?

 

அந்நாளில் தமிழரிடம்

சாதி மத பேதமில்லை.

பின்னாளில் ஆரியனும் பிரித்தாள – -வேண்டி

கொண்டு வந்தான் சாதி நான்கு

இன்று

புலம் பெயர் தமிழர் –  இவர்

புதுச்சாதி ஆயினரே !

 

– காந்தி – 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More