0
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இலங்கை திருகோணமலையில் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற உள்ள மேற்படி விழா இரு அமர்வுகளாக இடம்பெற உள்ளது.
கலைநிகழ்வுகளுடன் பல அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளும் இவ் விழாவில் இடம்பெற ஏற்பாட்டுக்குழுவினர் ஒழுங்கு செய்துள்ளனர்.