கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிளிநொச்சி பொலிஸ் நிலையம் இணைந்து கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழங்கு விதி முறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கிளிநொச்சி புனித அந்தோனியார் அ.த.க பாடசாலையில் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி கிளை உப தலைவர் சிவகுருநாதன், பொலிஸ் நிலைய அதிகாரி கிருஷ்ணராஜா மற்றும் பாடசாலை உப அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.
– கிளிநொச்சி விமல் | வணக்கம்LONDON க்காக –