ஜெனிவா ஊடக நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தபடவேண்டும். தற்போது தமிழினத்தின் இருப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்காக கட்டமை க்கப்பட்ட இனவழிப்பொன்று இடம்பெற்றுவருகின்றது. இவற்றைத் தடைசெய்வதற்கு இடைகால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்துவது அவசியமாகும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்று வழங்கப்டவேண்டும் அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருமாகும். இதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிடும் பட்சத்தில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளார்.