நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறப்புக்குழு துவங்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான்கெர்ரி கூறும் போது நைஜீரியாவில் கடந்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்பு குழு நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 14ம்தேதி போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நைஜீரிய குழந்தைகள் கடந்தப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.