இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ நேற்று திங்கட்கிழமை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பில் வைகோ ஈழத் தமிழர் நலன் பற்றி விரிவாக பேசியுள்ளார்.
மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு கூட்டணி வைக்க வேண்டிய தேவை காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ளது.
வெற்றி பெற்றதற்கு பிறகு நன்றி அறிவிப்பு உரையில் “தேர்தலில் பெற்ற வெற்றி 125 கோடி மக்களின் வெற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வோம்’ என மோடி கூறியது குறித்து, இது எந்தத் தலைவரும் கூறாத ஒன்று என அவரிடம் கூறியுள்ளார். “அந்த உரை தயாரிக்கப்பட்டதல்ல, இதயத்தில் இருந்து வந்தவை’ என்று மோடி கூறினார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மே மாதத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த இராணுவ உதவியைக் கொண்டு இலங்கை இராணுவம், லட்சக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தது.
காங்கிரஸ் தலைமை செய்த அதே தவறை மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் செய்யக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினேன்.
மேலும், ஈழத் தமிழர்கள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்புப் பெறுவார்கள்’ என நம்புவதாகவும் கூறியவேளை ஈழத் தமிழர் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயல்படுவேன்’ என்று அவர் உறுதியளித்தார் என வைகோ தெரிவித்தார்.