கிளிநொச்சியில் இயங்கும் KEDT அமைப்பு கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் சிறப்புற சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது. இன் நிகழ்வுக்கு பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (KILI PEOPLE) அனுசரணையை வழங்கியிருந்தது.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவ் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இவ்வாறான ஊக்கமளிக்கும் நிகழ்வுகளை பல அமைப்புக்கள் நடாத்துவது குறிப்பிடத்தக்கது.