Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா பணி; முதல்சம்பளத்துடன் தாயிடம் சென்ற தாதி மரணித்த சோகம்

கொரோனா பணி; முதல்சம்பளத்துடன் தாயிடம் சென்ற தாதி மரணித்த சோகம்

1 minutes read

கேரளாவை சேர்ந்த ஆண் செவிலியர் ஆசிஃப் கொரோனா நோயாளிகளுக்கு விடிய விடிய சேவை செய்து விட்டு முதல் மாத ஊதியத்துடன் வீடு திரும்பும் போது விபத்தில் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திரிசூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்குளம் என்ற ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் மார்ச் மாதம் பயிற்சி செவிலியராக சேர்ந்துள்ளார்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை விடிய விடிய கவனித்து அவர்களுக்காக சேவை செய்துள்ளார்.

கடந்த மாதம் அவர் பார்த்த வேலைக்கான ஊதியத்தை பெற்று கொண்டு அந்த மகிழ்ச்சியில் தாயை பார்க்க சென்றுள்ளார்.

ஆனால் செல்லும் வழியில் லொரியில் மோதி விபத்து ஏற்பட்டதில் ஆசிஃப் பரிதாபமாக உரியிழந்துள்ளார்.இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More